புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் வாழ்த்து

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் விக்கிரமசிங்க இது தொடர்பில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, -

புதிய ஜனாதிபதிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். ஜனநாயகத்தை மதிக்கும் நாம், அடுத்ததாக நடைபெறவேண்டிய பாராளுமன்றத் தேர்தல் குறித்து சபாநாயகர், கட்சித் தலைவர்கள், ஆளும் தரப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய எம்.பிக்களுடன் கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Mon, 11/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை