எமக்கு தேவை பாராளுமன்ற அனுபவ முள்ள தலைவர் தான். இராணுவ ஆட்சியாளர் அல்ல. சஜித்துக்கு பின்னால் உள்ள முஸ்லிம் தலைவர்களை விட மொட்டு பக்கம் உள்ளவர்கள் தான் ஆபத்தானவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம (10) அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற தெளிவுபடுத்தலை மேற்கொள்ளவேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளது.
கடந்த கால இருண்ட வேதனைகளை படிப்பினையாக வைத்து இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆழமாக சிந்தித்து அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென்ற முடிவினை எடுத்துள்ளது. தற்போது கிழக்கின் இருப்பைபற்றி பேசுவோர் தான் விடுதலை போராட்டத்தை காட்டி கொடுத்தவர்கள்.
சஜித்துக்கு பின்னால் உள்ள முஸ்லிம் தலைவர்களை விட மொட்டு பக்கம் உள்ளவர்கள் தான் ஆபத்தானவர்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழ் பேசும் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
பெரியபோரதீவு தினகரன் நிருபர்
from tkn