அம்பாறை மாவட்டத்தில் 518 வாக்களிப்பு நிலையங்கள்

5,03,790 பேர் வாக்களிக்க தகுதி

தேர்தல் சுமுகமாக நடைபெற சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

அம்பாறை மாவட்டத்தில் இன்று (16) நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் சுமுகமாக நடைபெறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார். மாவட்டத்தின் தேர்தல் பணிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை தேர்தல் தொகுதியில் 1,74,421 வாக்காளரும், சம்மாந்துறை தொகுதியில் 88,217 வாக்காளரும், கல்முனை தொகுதியில் 76,283 வாக்காளரும், பொத்துவில் தொகுதியில் 1,64,869 வாக்காளரும் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் 518 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மாவட்டத்தின்

தேர்தல் கடமைகளுக்காக 7,000 அரச உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதான வாக்கு எண்ணும் மத்திய நிலையமாக அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப கல்லூரி செயற்படுகிறது. பிரதான வாக்கு எண்ணும் நிலையம் உட்பட வாக்களிப்பு நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென 5,000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெரியநீலாவணை விசேட நிருபர்

Sat, 11/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை