மட்டக்களப்பு, மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்ற மூன்று பேருக்கு வாக்குச்சீட்டுக்கள் 15ஆம் திகதி இந்துக் கல்லூரியின் வழங்கல் பிரிவிலிருந்து எடுத்து சென்று வவுணதீவு வாக்கெடுப்பு நிலையத்தினூடாக மறுநாள் மாந்தீவுக்கு எடுத்து செல்லப்படும்.
மாந்தீவுக்கு இயந்திரபடகு மூலமாக வாக்கு சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டு வழமையான வாக்களிப்பு நேரத்தில் ஆரம்பித்து மாலை 5மணிக்கு வாக்கெடுப்பு நிறைவுறுத்தப்படுமென தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். மாவட்டத்தில் மிகவும் வாக்காளர் குறைந்த வாக்கெடுப்பு நிலையமாக இவ் வாக்களிப்பு நிலையம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மணல்சேனை, மட்டக்களப்பு குறூப் நிருபர்கள்
Sat, 11/09/2019 - 08:51
from tkn