10 வயதின் கீழ் பெண்கள் டி பிரிவின் சம்பியனாக பிசப் கல்லூரி தெரிவு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற மேசைப் பந்து சம்பியன்ஷிப் போட்டியில் கொழும்பு பிசப் கல்லூரி 10 வயதின் கீழ் பெண்கள் டி பிரிவில் சம்பியனாகியுள்ளது. இந்தப் போட்டிகள் கல்கிஸ்ஸை சென்- தோமஸ் உள்ளக விளையாட்டரங்கில் கடந்த ஒக்டோபர் 26ம் திகதி முதல் 28ம் திகதி வரையில் இடம்பெற்றது.

பிரமுக்ஷி பெர்னாண்டோ அணிக்கு தலைமை தாங்கியதோடு, சந்தில்மா சுஹெலி மற்றும் புத்மி பண்டாரவும் ஆகியோர் அணியில் இடம்பெற்றிருந்தனர். அணியின் பயிற்றுவிப்பாளராக சந்தன பெரேரா பணியாற்றியதோடு, உதவி பயிற்றுவிப்பாளராக கயான திலுப செயற்பட்டார்.

சிறப்பு பயிற்சியாளரான அலெக்ஷி யெப்ரிமோ இந்தப் போட்டிகளில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டதோடு, சம்பியனான பிசப் கல்லூரி மாணவிகள் அவரிடமிருந்து கிண்ணங்களைப் பெற்றுக் கொண்டனர்.

(புத்தளம் விஷேட நிருபர்)

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை