இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி

2020 ஐரோப்பிய கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

செக். குடியரசு அணியுடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் 2–1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. ஏற்கனவே யூரோ போட்டிக்கு தகுதி பெற்று விட்டாலும், கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக இங்கிலாந்து தோல்வியடைந்துள்ளது.

நடப்பு சம்பியன் போர்த்துக்கல் அணி 3–0 என்ற கோல் கணக்கில் லக்ஸம்பர்க் அணியை வென்றது. இதில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 94 ஆவது கோலை பதிவு செய்தார். சார்வதேச அளவில் 100ஆவது கோலை அடிக்க ரொனால்டோவுக்கு இன்னும் 6 கோல்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ரொனால்டோ ஒட்டுமொத்தமாக 699 கோல்களை அடித்துள்ளார். உக்ரைன் 2–0 என லிதுவேனியாவை வென்றது.

Mon, 10/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை