சஜித் ஏழை மக்களுக்காக பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டவர்

பாராளுமன்ற உறுப்பினர் சந்திப் சமரசிங்க

ஏழை மக்களுக்காக பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டவரே ஜனாதிபதி வேற்பாளர் சஜித் பிரேமதாஸ என ,ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திப் சமரசிங்க தெரிவித்தார்.

கந்தளாயில் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் பிரேமதாஸவின் காரியாலயம் நேற்று (23) திறந்து வைத்து உரையாற்றுகையிலே இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், திருகோணமலை மாவட்டத்தில் அதிகமான வீடுகளை நிர்மாணித்து தந்துள்ளார், சேருலவில தேர்தல் தொகுதியில் 1470 வீடுகளுக்கு மேல் நிர்மாணித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றால் ஏழை மக்களின் விடிவு இன்னும் அதிகமாக காணப்படும். வீடுகள் மட்டுமன்றி நீர்ப்பாசனம்,சுயதொழில் மற்றும் விவசாயிகளுக்கான செயற்றிட்டங்கள் அனைத்தும் முன்கொண்டு செல்லப்படும்.

விவசாயிகளுக்கான சில திட்டங்கள் பாராளுமன்றத்தில் முன்மொழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சஜித் பிரேமதாஸ பதவியேற்றவுடன் சிறப்பாக நடைபெறும். இன்று அனைவரும் கேட்கின்றார்கள் கேகாலை பாராளுமன்ற உறுப்பினர் ஏன் திருகோணமலை சேருவில தொகுதிக்கு வர வேண்டும் என்று, இது நான் எடுத்த முடிவல்ல. கட்சியின் தலைவர் மற்றும் கட்சி எடுத்த முடிவு.

நான் இதற்கு கட்டுப்படவேண்டும் ஏன் கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டைக்கு சஜித் பிரேமதாஸவை அனுப்பி வெற்றி பெறவைத்தார்கள். அதேபோன்றுதான் நான் திருகோணமலைக்கு வந்திருக்கின்றேன். 24 மணித்தியாலமும் மக்களுக்காக நான் சேவைசெய்து வருகின்றேன், தொடர்ந்தும் செய்வேன் என்றார்.

கந்தளாய் தினகரன் நிருபர்

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை