மூதூர் வேதந்தீவில் பாலம் அமைக்குமாறு கோரிக்ைக

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேதந்தீவு கிராமத்தையும் மூதூர் நகர் பகுதியையும் இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இரண்டு பிரதேசங்களுக்கும் தரைவழி போக்குவரத்து இல்லாமையினால் மக்கள் வேதந்தீவு களப்புக் கடலின் ஊடாக சுமார் 50 மீற்றர் தூரம் சிறியரக போட் மூலமே பிரயாணம் மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு பாடசாலை செல்லும் மாணவர்கள், வயல் நிலங்களுக்கு செல்வோர் மற்றும் வேதந்தீவு கிராமத்தில் வைத்தியசாலை இல்லாமையினால் அங்கிருந்து மூதூர் வைத்தியசாலைக்கு அவசர நோயாளர்களை கொண்டு செல்வோரும் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

இதனால் வேதந்தீவு கிராமத்தையும் மூதூர் நகர் பகுதியையும் இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைத்துத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

Fri, 10/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை