டிப்பர்-வான் நேருக்கு நேர் மோதி விபத்து

சாரதி பலி; ஏ 9 இல் சம்பவம்

ஆனையிறவு ஏ 9 பிரதான வீதியில் டிப்பர் மற்றும் வான் ஆகிய வாகனங்கள் நேருக்கு ​நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் வானின் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

அத்துடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டார்.

இவ் விபத்து சம்பவம் நேற்று அதிகாலை ஆனையிறவு, தட்டுவங்கொட்டி பகுதியில் இடம்பெற்றதுடன் இதன்போது வெள்ளவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய ஆதிமூலம் பரமேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவராவர்.

கொழும்பிலிருந்து பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் பயணித்த வானும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த டிப்பர் வாகனமுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் வான் சாரதி பலியாகியுள்ளதுடன் வானில் பயணித்த பயணி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனையிறவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 கிளிநொச்சி குறூப், பரந்தன் குறூப் நிருபர்கள்

Thu, 10/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை