கோமாரியில் அழுகிய நிலையில் காட்டு யானை

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட கோமாரி சங்கமன்கண்டியில் பாதையில் இருந்து சுமார் 200மீற்றர் தூரத்தில் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் தூர்நாற்றம் வீசிய நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இறந்த நிலையில் காணப்படும் யானையினை பார்த்த போது யானையின் தும்பிக்கை இல்லாது காணப்படுவதுடன் யானையின் உடல் அழுகிய நிலையில் தும்பிக்கையை நாய் மற்றும் காட்டு விலங்குகள் உண்டுள்ளதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இறந்த காட்டு யானையானது பொத்துவில் சங்கமன்கண்டி வீதிப் பெயர் பலகையில் இருந்து மேற்கு திசையில் காட்டு ஓரமாக இறந்து கிடப்பதுடன் , தூர்நாற்றம் வீசிவருதால் அதனை புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருக்கோவில் தினகரன் நிருபர்-

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை