காசநோய் சிகிச்சைக்கு ‘புரட்சிகரமான’ தடுப்பு மருந்து ஒன்றை ஆய்வாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த தடுப்பு மருந்து நோய்க்கு எதிராக நீண்ட காலம் பாதுகாப்புத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காசநோயால் ஒவ்வொரு ஆண்டும் உலகில் 1.5 மில்லியன் பேர் வரை உயிரிழக்கின்றனர்.
துரிதமாக தொற்றக்கூடிய இந்த நோய் பக்டீரியாவால் ஏற்படுகிறது. இதற்கு தற்போது உள்ள பி.சி.ஜி ஜப் தடுப்பு மருந்து அதிகம் தாக்கம் செலுத்துவதாக இல்லை.
இந்நிலையில் புதிய தடுப்பு மருந்தின் ஆரம்ப சோதனைகள் வெற்றி அளித்திருக்கும் நிலையில் அதற்கு அனுமதி பெற ஒருசில ஆண்டுகள் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
தென் இந்திய நகரான ஹைதராபாத்தில் இடம்பெற்ற நுரையீரல் ஆரோக்கிய மாநாட்டில், உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய மருந்து பற்றிய விபரம் வெளியிடப்பட்டுள்ளது. பக்டீரியாவில் இருந்து பெற்ற புரதங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக உள்ளது.
மருத்துவ சோதனைக்கான சிக்கலான கட்டத்தை கடந்திருக்கும் இந்த மருந்து தென்னாபிரிக்கா, கென்யா மற்றும் சிம்பாப்வேயில் 3,500க்கும் அதிகமான வளர்ந்தவர்களுக்கு சோதனை செய்யப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
from tkn