லேக்ஹவுஸ் நிறுவன முன்னாள் தலைவர் ஜி.பி. ராஜபக்ஷ காலமானார்

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜி.பி ராஜபக்ஷ நேற்று தனது 84 ஆவது வயதில் காலமானார்.

பன்னிப்பிட்டிய, தர்மபால வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் அரசாங்க சேவையில் பல பதவிகளை வகித்திருந்தார். 1996 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதியன்று லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக

பதவியேற்பதற்கு முன்னர் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராகவும் பணியாற்றினார்.அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக நுகே கொடை பீட்டர்ஸ் பிளேஸிலுள்ள 16ஆம் இலக்க இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் நெதிமாலை மயானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும்.

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை