'எறிபந்து' போட்டியில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை சம்பியன்

தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையே கல்வியமைச்சினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப்போட்டியின்போது 'எறிபந்து' (Through Ball) போட்டியில் மட்டக்களப்பு -ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை முதலாம் இடத்தைப்பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை எறிபந்து போட்டியில் இரண்டாவது தடவையாக செம்பியனாகத் தெரிவாகியுள்ளது. குருநாகலில் நடைபெற்ற இத்தேசிய போட்டியில் பங்கேற்று ஏறாவூரை வந்தடைந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் சமநேரத்தில் கோலாகலமாக நடைபெற்றன.

மாக்கான் மாக்கார் பாடசாலை மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு அதிபர் எம்எம்எம். முகைதீன் தலைமையிலும் றகுமானியா மகா வித்தியாலய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு அதிபர் எம்.எம். ஜௌபர் தலைமையிலும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிமனையின் அதிகாரிகள் , பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் என பலர் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் குறூப் நிருபர்

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை