ஸ்திரமான ஆட்சியை உருவாக்க சஜித்துக்கு வாக்களிப்போம்

நாட்டில் ஸ்திரமான ஆட்சியை உருவாக்க சஜித் பிரேமதாசவிற்கே வாக்களிப்போம். கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலின் போது எவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்தோமோ அது போல் கோட்டாவையும் இம் முறை நிராகரிப்போம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில நேற்று (29) இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது புதிய ஜனநாயக முன்ன ணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சிறுபான்மை சமூகம் உணர்வுகளை மதித்து அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் நாம் நிம்மதியாக தலை நிமிர்ந்து வாழ முடியும். இனவாதத்தை கக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதனதேரர், எஸ்.பி திசாநாயக்க, விமல் வீரவங்ச, உதயகம்மன்பில போன்றோர் மொட்டுக்கு ஆதரவளிக்கிறார்கள்.

இதை உணர்ந்து கொண்டாவது முஸ்லிம் சமூகம் சிந்தித்து சஜித்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் எவ்வாறு மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோமோ அது போன்று கோட்டாவையும் வீட்டுக்கு அனுப்புவோம். ஒன்றாய் ஓரணியில் நின்று சிறந்த தலைமைத்துவத்தை தெரிவு செய்வோம்.

சமூகம் சிந்தித்து வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம். கோடாரி காம்புகள் போன்று எமது சமூகத்தை சீர்குலைக்க முற்படுகிறார்கள், இதனை கண்டு நாம் ஒரு போதும ஏமாற வேண்டாம். நமது சமூகத்தின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தியோருக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.

அநியாயமாக மதஸ்தலங்களை, பர்தாவை, குர்ஆனை, ஹதீஸை நாசமாக்கிய இனவாத கும்பல்களை முறியடித்து தாய் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தினை விற்கும் ஏஜன்ட்டுகள் 2015 ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பலத்தை காட்டியுள்ளார்கள். இதில் தோல்வியுற்ற மகனே ஹிஸ்புல்லா, அதாவுல்லா, நஜீப் ஏ மஜீத் போன்றவர்கள் செயற்படுகிறார்கள்.

எனவே முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதித்து புதிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களியுங்கள் என்றார்.

திருமலை மாவட்ட விசேட, கந்தளாய் தினகரன் நிருபர்கள்

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை