போராட்டம் கிரிக்கெட்டை சீர்குலைப்பதற்கான சதி

பிசிபி தலைவர் குற்றச்சாட்டு

கிரிக்கெட் வீரர்களின் போராட்டத்தில் ஒன்றுமில்லை. அவர்கள் மிரட்டுகிறார்கள் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்நாட்டு கிரிக்கெட் போர்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டிற்கு திரும்பமாட்டோம் என ஷாகிப் அல்-- ஹசன் உட்பட சிரேஷ்ட வீரர்கள் பத்திரிகைகளுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ரி 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 3-ம் திகதி தொடங்குகிறது. வீரர்கள் பேராட்டத்தால் இந்தத்தொடர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஒன்றுமில்லை, நாட்டின் கிரிக்கெட் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கான சதி என வங்காளதேச கிரிக்கெட் போர்டின் இயக்குனர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘இந்தியத் தொடர் நெருங்கும் நேரத்தில் வீரர்களின் எதிர்பாராத இந்த போராட்டம், நாட்டின் கிரிக்கெட்டிற்கு எதிரான சதியாக பார்க்கப்படுகிறது. இந்த சதிக்கு பின்னால் இருப்பவர்களை கண்டுபிடிப்போம்’’ என்றார்.

இயக்குனர் ஜலால் யூனுஸ் கூறுகையில் ‘‘கிரிக்கெட் வீரர்கள் கோபமாகவும், ஏமாற்றமாகவும், விரக்தியாகவும் இருப்பதாக நாங்கள் காணவில்லை. அவர்கள் கிரிக்கெட் சபையின் முன்புதான் கோரிக்கைகளை வைத்திருக்க வேண்டும். அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர். இதில் ஒன்றுமில்லை. இது மிரட்டல்தான்’’ என்றார்.

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை