எத்தியோப்பிய பிரதமருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு

எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமது அலி இவ்வருடத்திற்கான சமாதான நோபல் பரிசுக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், சமாதானம், இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும்  நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அந்த வகையில், 2019ஆ-ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது. எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக கடந்த ஆண்டு ஏப்ரல் இரண்டாம் திகதி பொறுப்பேற்ற அபி அஹமது அலி, அண்டை நாடான எரித்திரியா ஜனாதிபதியுடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும் எத்தியோப்பிய நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும் ஆற்றிய அரும்பணிக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

Sat, 10/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை