தென்கிழக்கில் வளிமண்டல தளம்பல் நிலை

26 முதல் 30 வரை  கடும் மழை பெய்யும் வாய்ப்பு

இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் கடும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 26ஆம் திகதி இரவிலிருந்து 30ஆம் திகதி வரை அதிகரித்து காணப்படுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.  

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, மற்றும் ஊவா உட்பட், பொலன்னறுவை மாவட்டத்தில் சுமார் 150மி.மீ முதல் 150மி.மீ மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.  

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து காற்று வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-,40கிலோ மீற்றர் வரை காணப்படும்.  

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-,80கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.  

Sat, 10/26/2019 - 09:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை