நாட்டை ஐ.தே.க அழிவு பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியால் இன்று நாடு அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. இளைஞர் சமுதாயத்துக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க துரித பொருளாதார அபிவிருத்தியை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். நேற்று முன்தினம் கடவத்தையில் நடைபெற்ற பொதுஜன பெரமுன பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய அவர்,

ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றார். ஆனால் தேர்தல் நடத்துவதில்லை. இன்று எமது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காத அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை