கொக்குத்தொடுவாயில் வாகன விபத்து; பாடசாலை மாணவன் பலி

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.இதில் காயமடைந்த மற்றரெு மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவ் விபத்து சம்பவம் நேற்றுக் காலை கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. செல்வரத்தினம் கேதீஸ் (வயது11) என்ற மாணவனே இதில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாடசாலைக்கு முன்பாக வீதியில் சைக்கிளில் சென்ற மாணவர்களை கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்த வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்தால் ஆத்திரமடைந்த மக்கள் பாடசாலை முன்பாக குவிந்தனர். பொலிஸார் விபத்தை ஏற்படுத்திய பெரும்பான்மையின நபருக்கு சாதகமாக செயற்படுவதாக தெரிவித்து மக்கள் முரண்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந் நிலையில் சம்பவ இடத்துக்கு மேலதிக பொலிஸார் வருகை தந்ததுடன் விபத்து சம்பவம் தொடர்பாக கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

மாங்குளம் குறூப் நிருபர்

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை