மூழ்கும் சீர்பாத தேவி; முதலை நடமாட்டம் என அச்சம்

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட சீர்பாத தேவி பாடசாலை வளாகம், வெள்ளம் நிரம்பிய நிலையில் காணப்படுவதனால் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதாக பெற்றோர் சுட்டிக்காட்டி அச்சம் தெரிவிக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

மல்வத்தை 01கிராம சேவையாளர் பிரிவிலுள்ள இப் பாடசாலையில் தரம் 01முதல் 05வரையிலான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் வளாகத்திற்கு அருகில் முதலைகளின் இருப்பிடமான முதலைப் பாழி காணப்படுவதாகவும் வெள்ளம் நிற்பதனால் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், நீர் நிரம்பி ஈரலிப்பான நிலையில் இருப்பதனால் மாணவர்கள் விளையாட மற்றும் நடமாட முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சிறார்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலை வளாகத்தை முறையாக துப்புரவு செய்து, வெள்ளம் வழிந்தோடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாடசாலை சமூகம் கோரிக்கை விடுக்கின்றது.  

மண்டூர் குறூப் நிருபர் 

Sat, 10/05/2019 - 09:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை