ஒரு நல்ல தலைவரை தெரிவு செய்வதற்கான போராட்டமே இது

இந்த நாட்டுக்கு ஒரு நல்ல ஒரு தலைவரை கொண்டு வருகின்ற ஒரு போராட்டமாகவே இந்த தேர்தலை நாங்கள் பார்க்கின்றோம் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார். 

காத்தான்குடியில் நேற்று முன்தினம் இரவு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 

இந்த போராட்டம் என்பது நிச்சயமாக இந்த நாட்டினுடைய ஒரு நல்ல ஒரு தலைவரை கொண்டு வருகின்ற ஒரு போராட்டமாகவே நாங்கள் பார்க்கின்றோம் 

வெறுமனே தமிழர்களுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு அல்லது சிங்கள மக்களுக்கு இருக்கின்ற ஒருவர் தலைவராக இல்லாமல் இந்த மூன்றையும் ஒன்றிணைத்து இந்த நாட்டினுடைய இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு இன வேறுபாடு இல்லாமல் ஆட்சியை தொடர்ந்து கொண்டு செல்வதற்குரிய ஒரு இளம் தலைவராக மிகப்பெரும் தியாகத்தை இந்த நாட்டுக்குச் செய்த மறைந்த ரணசிங்க பிரேமதாஸ அவருடைய மகன் இன்று களத்தில் இறங்கி இருக்கின்றார். 

நாட்டுக்காக தலைமை தாங்குகின்ற ஒரு தேர்தலில் இறங்கியிருக்கின்றார். 

எனவே சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.   

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

 

Sat, 10/12/2019 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை