கோடிக்கணக்கில் பெறுமதியான சங்குகளுடன் இருவர் கைது

வலம்புரி சங்கு உட்பட 5 கௌரி சங்குகளை தம்வசம் வைத்திருந்த இருவர் மாளிகைக்காடு பிரதேசத்தில் கைதாகியுள்ளனர். 

மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்தில் வியாழக்கிழமை(10) மாலை குறித்த பொதி ஒன்றுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அம்பாறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அவ்விடத்திற்கு சென்று கைது செய்துள்ளதுடன், கைதான அதே இடத்தை சேர்ந்த ஆதம்பாவா (வயது -52), கந்தவனம் ஜீவரத்னம் (வயது- 43) ஆகியோரிடம் இருந்து போலி நாணயத்தாள்களை கண்டறியும் கருவி மற்றும் 625 கிராம் வலம்புரி சங்கு 1.235 கிராம் 1.505 கிராம் 675 கிராம் 515 கிராம் 1.190 கிராம் உள்ளிட்ட கோடிக்கணக்கான சங்குகள் மீட்கப்பட்டுள்ளன.

Sat, 10/12/2019 - 09:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை