தேசமான்ய எம்.சி. பஹார்டீனுக்கு கெளரவ கலாநிதி பட்டம்

பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான தேசமான்ய எம்.சி. பஹார்டீனுக்கு டயசிஸ் ஒப் ஆசியா இந்தியா பல்கலைகழகம் வணிகத்துறையில் கெளரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

டயசிஸ் ஒப் ஆசியா இந்தியா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பலர் கெளரவ கலாநிதி பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதன் போது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் கலாநிதி என்.எப்.ஜி.பொன்னுத்துரை இவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி வைப்பதைப் படத்தில் காணலாம். (படம்-: மருதமுனை தினகரன் நிருபர்)

Sat, 10/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை