விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் மாநாடு

இந்தியத் தலைநகர் புதுடில்லியை மையமாகக் கொண்டியங்கும் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் மாநாடு, அண்மையில் புதுடில்லியில் ஆரம்பமானது.விவசாயத்துறையில் கூட்டுறவுத் துறையின் பங்களிப்பை வலுவூட்டும் வகையில் நடத்தப்பட்ட இம்மாநாட்டில்.விவசாயக் கூட்டுறவு வலையமைப்பின் பிரதித் தலைவர்களில் ஒருவரான ரியாஸ் முஹம்மத் இலங்கை சார்பாகக் கலந்து கொண்டார்.

இம்மாநாட்டில் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.பாண்டிச்சேரி பால் உற்பத்தியாளர் அமையமும் இலங்கை இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கமும் இதன்போது முக்கிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக,சங்கத்தின் தலைவர் முஹம்மத் ரியாஸ் தெரிவித்தார்.

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை