திருமலை மாவட்டத்திற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை பெற்றுத் தருவேன்

திருகோணமலை மாவட்டத்திற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரை பெற்றுத் தருவேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

திருகோணமலையில் ​நேற்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள், ஆதரவாளர்களுடன் ஜனாதிபதி தேர்தல் குறித்து விளக்கமளிக்கும் செயலமர்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற சகல அபிவிருத்தித் திட்டங்களுக்கும் தான் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகவும் சமூகங்களுக்கிடையில் சமனான அபிவிருத்தியை ஏற்படுத்துவதாகவும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேம்படுத்தும் விசேட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

ரொட்டவெவ குறூப் நிருபர்

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை