கோட்டாவுக்கு சஜித் சவால்

நேரடி விவாதத்துக்கு அழைப்பு

நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக பார்க்கும் வகையில் நேரடி தொலைக்காட்சி விவாதமொன்றுக்கு வருமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு தாம் சவால் விடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி

வேட்பாளர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் மூலம் அதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

வாக்காளர்களின் முன்னிலையில் தமது கொள்கை மற்றும் எதிர்கால நோக்கங்கள் தொடர்பாக வேட்பாளர்கள் இருவரும் பகிரங்கமாக தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக அமையுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலம்மிக்க வேட்பாளரான தாம் எதிரணி ஜனாதிபதி வேட்பாளருடன் எழுத்துமூலமற்ற கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார். (ஸ)

 

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை