திருகோணமலையில் ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை-, அலஸ்தோட்டம் பகுதியில் சடலம் ஒன்றை புதைப்பதற்காக மயானத்தில் குளியொன்றினை தோண்டிக் கொண்டிருந்தபோது ஆயுதங்கள் சிலவற்றை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (06)பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் சடலமொன்றினை புதைப்பதற்காக குழிதோண்டிக் கொண்டிருந்த வேளை கேன் ஒன்றினை மீட்டுள்ளதுடன் கேனை திறந்து பார்த்தபோது ஆயுதங்கள் சிலவற்றை கண்டுள்ளனர். உடனே பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து வந்து சில ஆயுதங்களை மீட்டதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்கள்

ஏ பீ 2 - 05, எஸ். எஸ். எம். ஜீ. 01, டி 56 துப்பாக்கி ரவைகள் 1700 மற்றும் 9 எம். எம் துப்பாக்கி ரவைகள் 33, டி 56 மகசின் 15 எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

(ரொட்டவெவ குறூப் நிருபர் )

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை