மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய மாணவன் இர்ஷாத் பாதுர் றஹ்மான், தேசிய மீலாத் விழா போட்டியில் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் அதிபர் எம்.எல்.எம்.பைசல் தெரிவித்தார். கிழக்கு மாகாண மட்டத்தில் இடம்பெற்ற தேசிய மீலாத் விழா போட்டியில் வித்தியாலய மாணவன் இர்ஷாத் பாதுர் றஹ்மான் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவனையும், கற்பித்த ஆசிரியரையும் பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுவதாக வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.பைசல் மேலும் தெரிவித்தார்.
கல்குடா தினகரன் நிருபர்
Mon, 10/14/2019 - 06:00
from tkn