ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றிபெறுவது உறுதி யென இரு பிரதான வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷவும் சஜித் பிரேமதாஸவும் தெரிவித்தனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று கையளிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
பொதுஜன பெரமுன வேட்பளார் கோட்டாபய ராஜபக்ஷவையும் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவையும் வரவேற்க நேற்று பெருந்திரளான ஆதரவாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அருகில் திரண்டிருந்தார்கள்.
வேட்புமனு கையளித்து விட்டு வெளியேறுகையில் ஆதரவாளர்களுக்கு கையசைத்த இருவேட்பாளர்களும் தமது வெற்றி பற்றி கருத்து தெரிவித்தார்கள்.
மனிதாபிமானம் மேலோங்கும் அபிவிருத்தியின் கதிர்கள் பரவும் சிறந்த நாடொன்றை உருவாக்க தான் பாடுபடுவதாக ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இங்கு கூறினார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நடத்த உள்ளதாவும் கூறினார்.அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,மனோ கணேசன், கபீர் ஹாசிம் உட்பட பலரும் வருகை தந்திருந்தார்கள்.
மக்களின் ஆதரவுடன் பெருவெற்றி ஈட்டுவதாக பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அவரை வரவேற்க பெருந்திரளான ஆதரவாளர்கள் வருகை தந்திருந்ததோடு அவர்களுக்கு அவர் கையசைத்து தமது மகிழ்ச்சியை வெளியிட்டார்.
இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எதிரணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.(பா)
from tkn