கற்பிட்டி கடற்பிரதேசத்தில் 881 கிலோ பீடி இலைகள் மீட்பு

கற்பிட்டி, குடாவ கடற்பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு தொகை பீடி இலைகளுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி கடற்படையினருடன் இணைந்து இலங்கை கடலோர பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் குறித்த கடற்பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது 27 உரப் பைகளில் பொதி செய்யப்பட்ட 881 கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

 

 

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை