புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் பொன். சிவநாதன் தெரிவித்தார். இதேவேளை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் ஆரம்பப்பிரிவு அதிபர் ஞானமதி மோகனதாஸ் தெரிவித்தார். இதேவேளை முல்லைத்தீவில் கோபிநாத் கோபிதன் என்ற மாணவன் 183 புள்ளிகளை பெற்றுள்ளார். இம் மாணவன் யுத்தத்தில் தந்தை இழந்த நிலையில் தாயினுடன் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: வவுனியா விசேட, கோவில்குளம் குறூப், மாங்குளம் குறூப் நிருபர்கள்)

 

 

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை