40 தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்டவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 40 தங்க பிஸ்கட்களுடன் நபர் ஒருவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணப்படும் தீர்வையற்ற வணிக நிறுவனமொன்றில் கடமையாற்றும் 36 வயதுடைய ஊழியரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் ஊழியர்கள் வெளியேறும் வழியினூடாக தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட போது குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

32 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4 கிலோ கிராம் நிறையுடைய 40 தங்க பிஸ்கட்களையே குறித்த நபர் கடத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Sun, 10/20/2019 - 14:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை