சுற்றிவளைப்பில் 2180 சிகரெட் பெட்டிகள் மீட்பு

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நீர்கொழும்பு பெரியமுல்லை பகுதியில் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2180 சிகரெட் பெட்டிகளை கைப்பற்றியுள்ளனர்.

மேற்கு கடற்படையின் அதிகாரவரம்புக்குட்பட்ட நீர்கொழும்பு பெரியமுல்லையில் கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து நேற்றுமுன்தினம் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 2180 சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றில் 43 600 சிகரெட்கள் இருந்துள்ளன. வீடொன்றில் இவ்வாறு சிகரெட் பெட்டிகள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய நீர்கொழும்பைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை