10 ஓவர்கள் நிறைவில் 84/1
பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இன்றைய தினம் (05) இரவு நேர போட்டியாக லாஹூரில் இடம்பெற்று வரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதற்கமைய துடுப்பெடுத்தாடி களமிறங்கிய இலங்கை அணி 10 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 84 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவதோடு, கடந்த ஒரு நாள் போட்டியில் விளையாடிய ஒரு நாள் அணித் தலைவர் லஹிரு திரிமான்ன மற்றும் அஞ்சலோ பெரேரா, லஹிரு குமார ஆகியோருக்கு பதிலாக, பானுக ராஜபக்ஷ, இசுறு உதான, கசுன் ராஜித ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் அஹமட் ஷெஷாட் மற்றும் உமர் அக்மல் ஆகியோர் ரி20 அணிக்காக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கராச்சியில் இடம்பெற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், ஏனைய இரு போட்டிகளையம் வென்ற பாகிஸ்தான் அணி 2 -0 என தொடரை முழுமையாக கைப்பற்றியிருந்தது.
இதேவேளை, 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரின் முதலாவது போட்டி இன்று (05) இடம்பெறும் நிலையில், இத்தொடரின் இரண்டாவது போட்டி ஒக். 07, 3ஆவது போட்டி ஒக். 09 ஆகிய தினங்களில் லாஹூர் மைதானத்தில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை அணி
அவிஷ்க பெனாண்டோ, தனுஷ்க குணதிலக, மினோத் பானுக (வி.கா), தசுன் ஷானக (தலைவர்), பானுக ராஜபக்ஷ, இசுறு உதான, கசுன் ராஜித, லக்ஷான் சந்தகன், ஷெஹான் ஜயசூரியா, வணிந்து ஹசரங்க, நுவன் பிரதீப்
பாகிஸ்தான்
அஹமட் ஷெஷாட், பாபர் அசாம், உமர் அக்மல், சர்பராஸ் அஹமட் (தலைவர், வி.கா.), ஆசிப் அலி, இப்திகார் அஹமட், இமாத் வசிம், பஹீம் அஷ்ரப், சதாப் கான், மொஹமட் அமீர், மொஹமட் ஹஸ்னைன்
from tkn