சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு சீனாவில் உள்ள நிங்போ நகரத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அதன் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததும் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும் தீ வேகமாகப் பரவியதால், சிலர் தீயில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தீயில் சிக்கியவர்களில் 19 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
from tkn