ஈராக்கில் ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு: 18 பேர் பலி

ஈராக்கின் ஷியா புனித நகரான கர்பலாவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

முகமூடி அணிந்தவர்கள் ஆர்ப்பட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இதனால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

ஊழல், மோசமான அரச சேவைகள் மற்றும் ஏனைய குறைகளுக்கு எதிராகவே ஐந்தாவது நாளாகவும் நேற்று ஈராக்கில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களை கடந்து சென்ற கார்களில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பார்த்தவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். முகமூடி அணிந்த நபர்களால் சூடு நடத்தப்பட்டதாக மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகர் பக்தாத் மற்றும் ஏனைய நகரங்களில் இந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையிலேயே அங்கு மீண்டும் ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது.

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை