தவறுதலாக இளைஞனை கொன்ற பொலிஸாருக்கு 10 ஆண்டு சிறை

அமெரிக்க நகரான டல்லாஸில் தனது சொந்த வீட்டில் இருந்த இளைஞரை சுட்டுக்கு கொன்ற அண்டை வீட்டின் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

31 வயதான அந்த பெண் பொலிஸ் அதிகாரி தான் தனது சொந்த வீட்டில் இருப்பதாகவும் தமது வீட்டுக்குள் ஒருவர் ஊடுருவி இப்பதாகவும் நினைத்தே 26 வயது பொத்தம் ஜீன் என்ற இளைஞனை சுட்டதாக வாதிட்டுள்ளார்.

தனது சொந்த வீட்டின் இருக்கையில் ஐஸ்கிரீ சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜீன் மீது ஒரு அதிரடிப் படையின் தாக்குதல் பாணியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அரச வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

நீதிமன்றத்தில் உணர்வுபூர்வமான வாக்குமூலம் ஒன்றை அளித்த கொல்லப்பட்ட இளைஞனின் சகோதரர் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்தப் பெண்ணை நேசிப்பதாக தெரிவித்து, அவரை கட்டித் தழுவினார்.

“இதற்காக நீங்கள் உண்மையில் வருந்துவதாக இருந்தால், நான் உங்களை மன்னிக்கிறேன்” என்று கொல்லப்பட்டவரின் சகோதரர் அந்தப் பெண்ணிடம் குறிப்பிட்டார்.

Fri, 10/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை