தலைமன்னார் - கொழும்பு புகையிரதத்தில் மோதி 04 மாடுகள் பலி

தலைமன்னாரில் இருந்து நேற்று (30) புதன் கிழமை மதவாச்சியூடாக கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதி 4 மாடுகள் உயிரிழந்துள்ளன.

குறித்த சம்பவம் மன்னார்- மதவாச்சி பிரதான வீதி இசைமாளத்தாழ்வு பகுதியில் நேற்று (30) காலை 8.25 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

-தலைமன்னார் புகையிரத நிலையத்தில் இருந்து நேற்றுக் காலை 7.10 மணியளவில் குறித்த புகையிரதம் பயணித்துள்ளது.

இதன் போதே மன்னார் -மதவாச்சி பிரதான வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தை தொடர்ந்து புகையிரதம் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கி சென்றது.

-தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் தொடர்ச்சியாக மாடுகள் மோதி உயிரி ழக்கும் சம்பவம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 மன்னார் குறூப் நிருபர்

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை