விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்தீன் வித்தியாலயத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள் 25 விளையாட்டு போட்டியில் பங்குபற்றி 13 போட்டிகளில் முதலாமிடத்தையும், 06 போட்டிளில் இரண்டாம் இடத்தையும், 03 போட்டிகளில் மூன்றாமிடங்களையும் பெற்று பாடசாலைக்கும் அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கும் புகழை ஈட்டித்தந்துள்ளார்கள் என பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.
கடந்த 05 ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இவ் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
வெற்றிபெற்றுள்ள மாணவர்கள் 2019 ஆம் ஆண்டின் விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெறவுள்ள தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் பங்கு பற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய போட்டியிலும் அம்மாணவர்கள் வெற்றி பெற பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் என்பன வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றார்கள்.
ஒலுவில் விசேட நிருபர்
from tkn