மலையகத் தொழிலாளி கௌரவிப்பு

கண்டி, மஹய்யாவ பகுதியில் ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொழிற்பட்டு சமூகத்தை விழிப்படையச் செய்த மாரிமுத்து ஐயாசாமி அண்மையில் கௌரவிக்கப்பட்டு மறுமலர்ச்சித் தந்தை என்ற நாமமும் சூட்டப்பட்டார். கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் ஒழுங்கு செய்த இவ்வைபவத்தில் அதன் நிறைவேற்று அதிகாரி பெ. முத்துலிங்கம், பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறைப் பேராசிரியர் கலாநிதி விஜயச்சந்திரன் உட்பட அதிதிகள் கலந்துகொண்டு அவரை கௌரவித்தனர்.

(அக்குறணை குறூப் நிருபர்)

Wed, 09/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை