கல்விசாரா ஊழியர் போராட்டத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஆதரவு

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டோர் முன்னெடுக்கும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்துக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேரடியாகச் சென்று ஆதரவு தெரிவித்தார். நேற்று முன்தினம் புதன்கிழமை பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பான இவர்களின் ஆர்ப்பாட்டத்தை நேற்றுச் (12) சென்று பார்வையிட்ட முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கோரிக்கைகள் நியாயமானதென்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகள், நியமனங்கள் அனைத்தும் அரசியல் தலையீடுகளுக்கு உட்பட்டுள்ளதாகக் கூறியே, இந்த ஆர்ப்பாட்டம் பாதிக்கப்பட்டோரால் முன்னெடுக்கப்படுகின்றது.

(யாழ்.விசேட நிருபர்)

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை