புத்தளத்தில் இன நல்லிணக்க விளையாட்டுப் போட்டி

புத்தளம் மாவட்ட செயலகம், புத்தளம் நகர சபை உட்பட அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கி, விளையாட்டின் ஊடாக இன ஒற்றுமையையும், இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்ரானந்தா மற்றும் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.அதில் ஓர் அம்சமாக புத்தளம் நகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இன நல்லிணக்க விளையாட்டு பெருவிழா வெள்ளிக்கிழமை(06)முழுநாளும் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது. புத்தளம் மாவட்ட செயலகம், புத்தளம் நகர சபை மற்றும், புத்தளம் கழகம் ஆகியன இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டப்போட்டிகள், ஈட்டி எறிதல், குண்டு போடுதல், பரிதி வட்டம் வீசுதல், உயரம் பாய்தல், நீளம் பாய்தல், கிரிக்கெட், பூப்பந்து, உதைபந்து உள்ளிட்ட பல்வேறு போட்டி நிகழ்வுகள் இதன் போது இடம்பெற்றன.நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார கலந்து கொண்டார். (படங்கள் : புத்தளம் தினகரன் நிருபர்)

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை