புத்தளம் ரெட் மார்க் கிரிக்கெட் கழகம் வெற்றி

புத்தளம் பவர் கலக்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அணிக்கு 07 பேர்களை கொண்ட 'பூம் பூம்' கிரிக்கெட் போட்டி தொடரில் புத்தளம் ரெட் மார்க் கிரிக்கெட் கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளது. 'பூம் பூம்' கிரிக்கெட் கழகத்தினால் நடாத்தப்பட்ட இந்த போட்டி தொடர் கடந்த வெள்ளியன்று மாலை (06) நடைபெற்றது.

புத்தளம் ரெட் மார்க், ப்ளக் ஈகிள், வைபஸ் மற்றும் தொடரை நடாத்திய பூம் பூம் ஆகிய நான்கு கிரிக்கெட் கழகங்கள் இப்போட்டி தொடரில் பங்கேற்றன.

தொடரின் இறுதி போட்டியில் ரெட் மார்க் மற்றும் வைபஸ் கழகங்கள் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய ரெட் மார்க் அணியினர் 07 ஓவர் நிறைவில் 05 விக்கட்டுகளை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றனர். சிமாக் 45 ஓட்டங்கள், அரீஜ் 28 ஓட்டங்கள்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வைபஸ் அணியினர் 07 ஓவர் நிறைவில் 06 விக்கட்டுகளை இழந்து 66 ஓட்டங்களை மாத்திரம்பெற்றுக்கொண்டதால் 18 மேலதிக ஓட்டங்களால் ரெட் மார்க் அணியினர் வெற்றி பெற்று சம்பியனாகினர். ஆட்ட நாயகனாக ரெட் மார்க் அணி வீரர் சிமாக் தெரிவானார். ரெட் மார்க் அணியினை அவ் அணியின் தலைவர் ஷான் முஹம்மது வழி நடாத்தி இருந்தார்.

 புத்தளம் தினகரன் நிருபர்

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை