கப்பலேந்தி மாதா ஆலயப் பெருவிழா

மன்னார் மறைமாவட்டத்தில் கப்பலேந்தி மாதா ஆலயப் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) பங்கு தந்தை அலெக்ஸ்சாண்டர் பெனோ அடிகளார் தலைமையில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தின் தூய ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி அதிபர் அருட்பணி டெஸ்மன் குலாஸ் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். திருச்சுரூப பவனியைத் தொடர்ந்து திருச்சுரூப ஆசீரையும் அருட்பணிடெஸ்மன் குலாஸ் இறை மக்களுக்கு வழங்கினார்.

அத்துடன் அன்றைய தினம் தேவ அன்னையின் பிறந்த தினத்தை உலகத் திருச்சபை கொண்டாடி வருவதை முன்னிட்டு கரிசல் அன்னையின் ஆலயத்திலும் கேக் வெட்டி அருட்பணியாளர் சிறுவர்களுக்கு பரிமாறினார்.

(தலைமன்னார் நிருபர் )

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை