ரயில்வே தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
சம்பள முரண்பாட்டு பிரச்சினையை முன்வைத்து இவ்வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
இவ்வேலைநிறுத்தத்தில் ரயில் நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிர்வாகத்தினர், கண்காணிப்பாளர்கள் மற்றும் சாரதிகளும் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இன்று மாலை அனைத்து தபால் ரயில்களின் சேவைகளும் நிச்சயமற்றதாக காணப்படுவதாகவும் ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும்,மாலை பயணிக்கவுள்ள அனைத்து அலுவலக ரயில்களும் வழமைபோல் இயங்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wed, 09/25/2019 - 16:28
from tkn