மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்ச ருமான ராம் ஜெத்மலானி (95 வயது) காலமானார். .

கடந்த சில மாதங்களாக அவர் உடல்நலக் குறைவால் வீட்டிலிருந்தவாறே சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவர் உயிரிழந்தார்.

இதனை உறுதி செய்த அவரின் மகன் மகேஷ் மலானி இன்று மாலை(நேற்று) லோதி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பிறந்த இவர் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் அவர் மும்பைக்கு குடிபெயர்ந்தார்.

வாஜ்பாய் அமைச்சரவையில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பணிபுரிந்தார்.

 

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை