வலைப்பந்தாட்டத்தில் மொறவெவ பிரதேச செயலக பெண்கள் அணி சம்பியன்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கிடையிலான மகளிருக்கான வலைப்பந்தாட்டப்போட்டி 2019.08.31 ஆந் திகதி மூதூர் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது

இவ் வலைப்பந்தாட்டப்போட்டியில் மொறவெவ பிரதேச செயலக பெண்கள் அணி வலைப்பந்தாட்டப்போட்டியில் சம்பியனாகத்தெரிவு செய்யப்பட்டது .

இவர்களுக்கான சம்பியன் கிண்ணத்தினை மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் வழங்கி கௌரவித்தார்.

இதில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராசா, மேலதிக அரசாங்க அதிபர் காணி எம்,ஏ. அனஸ் திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தோப்பூர் தினகரன் நிருபர்

Wed, 09/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை