கார் விபத்து ; மூவர் படுகாயம்

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி திரியாய் சந்தி மற்றும் நொச்சிகுளம் போன்ற பகுதிகளில் நேற்று (08) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் இரண்டை உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானது.

வேகமாக வந்த கார் சாரதிக்கு தூக்கம் சென்றமையால் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாதம் மாத்திரம் 13 விபத்துக்கள் வேகக்கட்டுப்பாட்டை மீறி சென்றமையினாலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை