முச்சக்கரவண்டி ஒன்றினை கொள்வனவு செய்ய வந்தோர், அது தரமாக உள்ளதா என்று பரீட்சித்துப் பார்க்க அதனைச் செலுத்திய போது முச்சக்கர வண்டியின் முன்பக்க டயர் கழன்று வீழ்ந்து முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அம்பாறை பகுதியிலிருந்து, ஓட்டமாவடிக்கு முச்சக்கர வண்டியொன்றினை கொள்வனவு செய்ய வந்த குழுவினர் அதனைப் பெற்றுக் கொள்வதற்காக முச்சக்கர வண்டியை செலுத்திப் பார்க்கும் போதே டயர் கழன்றதில் இவ்விபத்து இடம்பெற்றது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாசல் வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் கீழ்ப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு பயணித்தோர் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம். பர்ஸான்)
Sun, 09/29/2019 - 19:39
from tkn