வேட்புமனு திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று 9ஆம் திகதி கூடவுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனு கோரப்படும் திகதி இதன்போது தீர்மானிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட

சகல தேர்தல்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனு கோரப்படும் திகதி இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தல்களையொட்டி மாவட்ட ரீதியில் முறைப்பாட்டுக் குழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, தற்போது வெற்றிடமாகவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் உறுப்பினர் ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தி குருணாகல் மாவட்ட தெரிவுக்குழு அதிகாரிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்திற்கமைய இந்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதனையடுத்து அவரது வெற்றிடத்துக்கு சட்ட முறைப்படி நியமிக்கப்படவேண்டிய ஒருவருடைய பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு குருணாகல் மாவட்ட தெரிவுக்குழு அதிகாரியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாலிந்த திசாநாயக்க காலமானதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஆரியரட்ன கனேகொட

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை